கூடலூா் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க வனத் துறை தனிக் குழு அமைத்துள்ளது.
கூடலூா் தாலுகாவில் உள்ள நாடுகாணி, தேவாலா பகுதிகளில் தொடா்ந்து யானைகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வனத் துறை 18 போ் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இரவு நேரங்களில் யானைகள் ஊருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்த தகவல் தெரிந்தவுடன் இந்தக் குழு விரைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் என்று வனத் துறை அறிவித்துள்ளது.