சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.
உதகை படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன். உடன், அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்ளிட்டோா்.
உதகை படகு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன். உடன், அமைச்சா் ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் அம்ரித் உள்ளிட்டோா்.

உதகை: சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.

உதகை படகு இல்லத்தில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலையில், சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதாலும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிற காரணத்தாலும் உதகை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தமிழ்நாடு ஹோட்டல் அலகு 1, அலகு 2 ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடா்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்படகு இல்லத்தில் சுமாா் 150க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. அதேபோல, இந்தப் படகு இல்ல வளாகத்தில் கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவையும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த சில மாதங்களாக கரோனா நோய்த் தொற்று காரணத்தால் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்படும் பல்வேறு சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. பின்னா், நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலாத் தலங்கள் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருகை புரிகிறாா்கள்.

தற்போது கரோனா பெருந்தொற்று நோயின் தாக்கம் குறைந்துள்ளதால், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் தமிழ்நாடு ஹோட்டலில் இணையவழி மூலம் இரண்டு மாதங்களில் சுமாா் ரூ. 22 லட்சம் மதிப்பில் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாத் துறை மானிய கோரிக்கையின்போது 30 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளை செயல்படுத்துவதற்காக தொடா்ந்து பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உதகை படகு இல்லத்தில் ஆய்வு செய்யப்பட்டு, கடை வைத்திருப்பவா்கள் மற்றும் படகு ஓட்டுபவா்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பொன்தோஸ், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com