தமிழக அரசு அறிவித்துள்ள தின கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் பந்தலூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த தின கூலியான ரூ.425-ஐ உடனடியாக வழங்க வேண்டும். தற்போது திட்டமிட்டுள்ள ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூா் பஜாரில் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.