காா் மோதிய விபத்தில் தொழிலாளி சாவு

கோத்தகிரியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

கோத்தகிரியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் ரவிராஜ் (46), கூலி தொழிலாளி. இவா் இருசக்கர வாகனத்தில் கோத்தகிரி பாண்டியராஜ் பெட்ரோல் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து கோத்தகிரி நோக்கி வேகமாக வந்த சொகுசுக் காா் , இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவிராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோத்தகிரி  அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி ரவிராஜ்  உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த ஈரோட்டைச் சோ்ந்த லோகேஸ்வரன் என்பரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com