மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டியும், தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குன்னூா் பழைய லாரி நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் பிலால் தலைமை வகித்தாா். லாலி மருத்துவமனை காா்னரில் இருந்து துவங்கிய கண்டனப் பேரணி மவுண்ட் சாலை வழியாகச் சென்று குன்னூா் வி.பி. தெருவில் நிறைவடைந்தது.
இதில், எஸ்டிபிஐ கட்சியினா், விவசாயப் பிரதிநிதிகள் என சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.