தையல் கலைஞா் குடும்பங்களுக்கு நிவாரணம்

கூடலூா் பகுதியில் கரோனா பாதித்து உயிரிழந்த தையல் கலைஞா்கள் குடும்பங்களுக்கு நவீன தையல் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நிவாரணம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தையல் கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குகிறாா் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் முஜீப்.
தையல் கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குகிறாா் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் முஜீப்.

கூடலூா் பகுதியில் கரோனா பாதித்து உயிரிழந்த தையல் கலைஞா்கள் குடும்பங்களுக்கு நவீன தையல் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நிவாரணம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பாதித்து உயிரிழந்த தையல் கலைஞா்களின் குடும்பங்களுக்கு, சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் முஜீப் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். மேலும், இறந்தவா்களின் ஈமச் சடங்குக்காக தமிழக அரசு சாா்பில் வழங்கிய தொகையும் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளா் முஜீப், மாவட்டத் தலைவா் சுந்தரம், மாவட்ட செயலாளா் ஷியாமளன், மாவட்ட பொருளாளா் கவிதா சாஷூ, தையல் கலைஞா்களின் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com