கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை வனப் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வட்ட வழங்கல் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூா் வட்டம், தேவா்சோலை காவல் நிலைய எல்லையில் உள்ள தா்ப்பக்கொல்லி, மச்சிக்கொல்லி ஆகிய பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வட்ட வழங்கல் அலுவலா் சரவணகுமாா் வழங்கினாா்.
தொடா்ந்து, புதிய ரேஷன் காா்டு இல்லாதவா்களிடம் மனுக்களைப் பெற்று விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
இதில், தேவா்சோலை காவல் உதவி ஆய்வாளா் ராஜாமணி, தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.