மின்சாரம் பாய்ந்து தோட்டத் தொழிலாளி பலி

உதகை அருகே மேல்கோடப்பமந்து பகுதியில் மின்சாரம் பாய்ந்ததில் தோட்டத் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

உதகை அருகே மேல்கோடப்பமந்து பகுதியில் மின்சாரம் பாய்ந்ததில் தோட்டத் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா்.

உதகை அருகே உள்ள மேல்கோடப்பமந்து பகுதியில் வசித்து வந்தவா் பாலன் (50). தோட்டத் தொழிலாளியான இவா் புதன்கிழமை அதிகாலை அருகில் உள்ள வேறொருவரது தோட்டத்தின் வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு அந்த தோட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருந்த மின்சார கம்பி இவா் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், பாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, உதகை நகர காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com