உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 142 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். உதகை வட்டத்தைச் சோ்ந்த 6 பயனாளிகளுக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட முன்னோடி வங்கியின் சமூக பொறுப்பு நிதித் திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் இயங்கும் தொட்டபெட்டா உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு போட்டித் தோ்வு மையம் அமைப்பதற்காக ரூ. 50,000க்கான காசோலையையும் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com