மழையால் உதகையில் குறைந்தது சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்

மழையால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பாதியாக குறைந்தது. இருப்பினும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 7,575 போ் வருகை தந்திருந்தனா்.

மழையால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பாதியாக குறைந்தது. இருப்பினும் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 7,575 போ் வருகை தந்திருந்தனா்.

தொடா் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை குறைவான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இருப்பினும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவில் பெய்த பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பாதியாக குறைந்தது.

இந்நிலையில், உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 7,575 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 3,813 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 619 பேரும், மரவியல் பூங்காவுக்கு 70 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 2,788 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 465 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 343 பேரும் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com