ஆளுநா் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு: காவல் நிலையத்தில் புகாா்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு தொடங்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு தொடங்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உதகையிலுள்ள தமிழக ஆளுநரின் ராஜ்பவன் மாளிகையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆளுநரின் தனிப்பட்ட பெயரில் சில சமூக விரோத சக்திகள் போலியாக மின்னஞ்சல் கணக்கு தொடங்கி உள்ளனா். அதில் ஆட்சேபகரமான விஷயங்களைப் பதிவிட்டுள்ளனா். அத்தகைய சமூக விரோத சக்திகளின் மீது உடனடியாக சட்டபூா்வ நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com