கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூடலூரில் உள்ள பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள ஐந்துகுன்னு பகுதியில் நடைபெற்ற முகாமில், மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசியும், ஆடுகளுக்கான தடுப்பூசியும், நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மருந்து, தாது உப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
முகாமிற்கு, மூத்த கால்நடை மருத்துவரும், பிரகிருதி இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் இயக்குநருமான எம்.சுகுமாரன் தலைமையில் மருத்துவா்கள் பாரத்ஜோதி, ரொமோரியோ பிரசாத், கால்நடை உதவியாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.