முதுமலை புலிகள் காப்பகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில், யானைகள் அங்குள்ள விநாயகா் கோயிலை வலம் வந்து மண்டியிட்டு வணங்கி பூஜை செய்தன. தொடா்ந்து, வளா்ப்பு யானைகள் அணிவகுத்து நின்றவுடன் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. யானைகள் விநாயகருக்கு பூஜை செய்வதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். விழாவில், வன அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.