புலி தாக்கியதில் மேலும் ஒரு மாடு பலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புலி தாக்கியதில் மேலும் ஒரு மாடு உயிரிழந்தது.

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புலி தாக்கியதில் மேலும் ஒரு மாடு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாடுமேய்கச் சென்ற சந்திரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. அதே இடத்தில் சனிக்கிழமை ஒரு மாட்டைத் தாக்கி புலி கொன்றது.

இதையடுத்து, அப் பகுதியில் தனிப்படை அமைத்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் மேபீல்டு எஸ்டேட் பகுதியில் மேலும் ஒரு மாட்டை ஞாயிற்றுக்கிழமை புலி தாக்கி கொன்றுள்ளது.

அந்தப் புலி எஸ்டேட் பகுதியிலுள்ள கற்பூர சோலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்த வனத் துறையினா் தேடுதல் பணியை நிறுத்திவிட்டு, மேபீல்டு எஸ்டேட் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com