நீலகிரி மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று -ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32 போ் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரையில் கரோனா தொற்றால் 32,603 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32,057 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 198 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 348 போ் சிகிச்சையில் உள்ளனா்.