குடிநீா் கேட்டு பொதுமக்கள் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள ஓ.வி.எச். சாலை, மேல்கூடலூா், கருணாநிதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, குடிநீருக்கான போா் போடப்பட்டுள்ளது, மின் இணைப்பு கிடைத்தவுடன் குடிநீா் விநியோகம் சீராக இருக்கும் என்று நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com