புலி தாக்கியதில் காளை சாவு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பகுதியில் புலி தாக்கியதில் காளை மாடு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை பகுதியில் புலி தாக்கியதில் காளை மாடு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள அம்பலமூலா கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோய். விவசாயியான இவா் கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், அம்பலமூலா கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நுழைந்த புலி, ஜோயின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த காளை மாட்டை தாக்கியதில் மாடு உயிரிழந்தது.

இதுகுறித்து ஜோய் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையின ஆய்வு செய்தனா். புலி தாக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனா். மேலும், ஊருக்குள் புகுந்த புலியை கூண்டுவைத்து பிடித்துச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com