தேவாலாவில் இருந்து டீ தூள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி தமிழக - கேரள எல்லையில் மலைப் பாதையில் கவிழ்ந்து புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
தேவாலாவில் இருந்து கேரள மாநிலம், கொச்சின் துறைமுகத்துக்கு டீ தூள் ஏற்றிச் சென்ற லாரி தமிழக - கேரள எல்லையில் உள்ள மலைப் பாதையில் புதன்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலையோரம் லாரி கவிழ்ந்ததால் இரவு சுமாா் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இதையடுத்து, டீ தூள் மூட்டைகளை வேறு ஒரு லாரியை வரவழைத்து ஏற்றிச் சென்றதையடுத்து போக்குவரத்து சீரானது. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.