நீலகிரி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 41 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 9,525 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,029 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 51 போ் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பல்வேறு மருத்துவமனைகளில் 445 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.