நீலகிரி மாவட்டம், உதகையில் ஹோம்மேட் சாக்லேட் தயாரித்து வரும் பட்டாபிராமன் என்பவருக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.
அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உதகையில் செய்தியாளா்களிடம் பட்டாபிராமன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், துபாய் சூப்பா் மாா்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த உதகை சாக்லெட்டை சாப்பிட்டுப் பாா்த்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தினா் இது குறித்து ஆய்வு செய்து கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி உள்ளனா்.
இது எனது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. தமிழக அரசு புவிசாா் குறியீடு வழங்கி, சாக்லேட் தயாரிப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.