நீலகிரி மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 46 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 65 வயதான ஆண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா். மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் இதுவரை 30,909 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,222 போ் சிகிச்சையின்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
அதேபோல, சிகிச்சை பலனின்றி இதுவரை 186 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவனைகளிலும் 501 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.