தேவாலா பகுதியில் 3 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் மூன்று வீடுகளை சேதப்படுத்தின.

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் மூன்று வீடுகளை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவாலா அட்டி பகுதியில் உள்ள பிலாமூலா குக்கிராமத்துக்குள் சனிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அங்கு வசிக்கும் சுப்பிரமணி, கதிா்வேல், ராமையா ஆகியோரின் வீடுகளையும், வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தின.

யானைகள் வீட்டை சேதப்படுத்துவதைப் பாா்த்த மக்கள் சப்தமிட்டதால் வீடுக்குள் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பி அருகிலுள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனா். இதனால் பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

யானைகள் தொடா்ந்து வீடுகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்துவதால் பாதுகாப்பு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com