கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: எல்லைகளில் சோதனை தீவிரம்

கேரள மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடலூரை அடுத்துள்ள மாநில எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால் கூடலூரை அடுத்துள்ள மாநில எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் தாலுகாவிலுள்ள பகுதிகள் பெரும்பாலும் கேரளம் மற்றும் கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன.

மேலும் இப்பகுதி மூன்று மாநில வனப் பகுதிகள் சந்திக்கும் இடமாகும். கேரளத்தில் ஓணம் பண்டிகையைத் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள மாநில எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கேரளத்திலிருந்து கூடலூா் பகுதிக்கு வரும் பொதுமக்களில் ஆா்டிபிசிஆா் சோதனை செய்யாதவா்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனா். வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com