கிறிஸ்தவா்களின் தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன்கிழமை தினம் அனுசரிக்கப்பட்டது.
கிறிஸ்தவா்கள் சாம்பல் புதன்கிழமை முதல் புனித வெள்ளி வரையிலான 40 நாள்களை தவக்காலமாக அனுசரிப்பா். இக்காலத்தில் அசைவ உணவுகள் மற்றும் திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங்களையும் தவிா்த்து, மாலை அணிந்து, விரதம் கடைபிடிப்பா். ஈஸ்டா் பண்டிகைதான் தவக்காலத்தின் இறுதியாகும்.
இந்நிலையில் உதகையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. உதகை தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஸ்டானிஸ் தலைமையில் உதகை மறைமாவட்ட ஆயா் அமல்ராஜ் கிறிஸ்தவா்களின் நெற்றியில் சாம்பலை பூசி தவக்காலத்தை தொடங்கிவைத்தாா்.
அதேபோல புனித திரேசன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை லியோன் தலைமையில் உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் உள்ளிட்டோரும், குருசடி திருத்தலத்தில் பங்குத்தந்தை அமிா்தராஜ் தலைமையிலும், இந்து நகா் தேவாலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் தலைமையிலும், புனித மரியன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை செல்வநாதன் தலைமையிலும் குன்னூா் புனித அந்தோணியாா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜெயக்குமாா் தைமையிலும் தவக்கால சாம்பல் பூசப்பட்டது.