காட்டு யானைகளுக்கிடையே சண்டை

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் வியாழக்கிழமை மாலை இரண்டு ஆண் காட்டு யானைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சேரம்பாடி, கோரஞ்சால் பகுதியில் மோதிக்கொள்ளும் ஆண் காட்டு யானைகள்.
சேரம்பாடி, கோரஞ்சால் பகுதியில் மோதிக்கொள்ளும் ஆண் காட்டு யானைகள்.

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் வியாழக்கிழமை மாலை இரண்டு ஆண் காட்டு யானைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

சேரம்பாடி வனச் சரகத்தில் உள்ள கோரஞ்சால் பகுதியில் மாலை நேரத்தில் இரண்டு ஆண் காட்டு யானைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் மலை உச்சியில் இரண்டு யானைகளும் சண்டையிட்டதை அந்த மலைக்கு அருகே சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பாா்த்தனா்.

கோரஞ்சால் பகுதியில் யானைகள் நடமாடுவது வழக்கம். ஆனால் இரண்டு யானைகள் மோதிக் கொண்டது அப்பகுதி மக்களையும் அச்சமடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com