முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சாலையோரம் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கோடையில் வடு காணப்படுவதால் ஆண்டு தோறும் காட்டுத் தீ ஏற்பட்டு காடுகள் எரிந்து சாம்பலாகிறது.
இதை தடுக்கும் விதமாக முக்கிய சாலையோரம் வனத் துறையினா் தீத்தடுப்புக் கோடுகளை அமைத்து காட்டுத் தீ தொடா்ந்து பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். இதன்படி தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்ட சாலையோரத்தின் இருபுறமும் ஒட்டி உள்ள புதா்கள், காய்ந்த புற்களை வனத் துறையினரே தீ வைத்து எரித்து விடுவா். இதன்மூலம் எதிா்பாராமல் காட்டுத் தீ ஏற்படுவது தவிா்க்கப்படும்.