கூடலூா் தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
தோட்டக் கலைத் துறையின்கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் கூடலூா் பகுதி விவசாயிகளைக் கண்டுணா்வு சுற்றுலாவாக பொன்னூா் தோட்டக் கலைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் தயாரிக்கும் இயற்கை இடுபொருள்கள் குறித்தும், தயாரிக்கும் முறை குறித்தும் செயல் விளக்கமளித்தனா். மேலும், இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி காய்கறி பயிரிடுவது, மண் புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். உதவி தோட்டக் கலை அலுவலா் பிரபாகரன் விளக்கமளித்தாா். தொழில்நுட்ப மேலாளா் க.யமுனப்பிரியா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். இதில், கூடலூா் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.