கூடலூா் பகுதி விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி பயிரிடுவது குறித்த பண்ணைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலாவாக மசினகுடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதில், இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடும் பண்ணைக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் தொழிநுட்ப மேலாண்மை முகமைத் திட்ட உதவி மேலாளா் ஜா.ஆன்சி டயானா செய்திருந்தாா்.