கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின வெளி வட்ட வனப் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட வனப் பகுதியான மசினகுடி, சீகூா், சிங்காரா உள்ளிட்ட சரகங்களில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தோ்வு செய்யப்பட்ட 400 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
தொடா்ந்து 25 நாள்கள் இந்த கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறும் என்று தெரிகிறது.