கூடலூா்: கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி விவசாயிகளுக்கு அரசு தோட்டக் கலைத் துறையில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள போத்துக்கொல்லி பழங்குடி கிராமத்தில் தோட்டக் கலைத் துறையின்கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப முகமைத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், இயற்கை வேளாண்மை குறித்தும் தெருநாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கூடலூா் தோட்டக் கலை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். இதில், தோட்டக் கலை அலுவலா்கள், பழங்குடி விவசாயிகள் கலந்துகொண்டனா்.