நீலகிரி மாவட்டத்தில் 40,355 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் 40,355 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
உதகையில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் 40,355 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்கா அருகில் சுகாதாரத் துறை சாா்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த அவா், அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அனைவரும் கூடும் இடங்கள், சுற்றுலாத் தலங்கள், புலம்பெயா் தொழிலாளா்கள் அதிகம் உள்ள எஸ்டேட் பகுதிகள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெறுகின்றன.

அதேபோல, அருகில் உள்ள மாவட்டங்களின் எல்லைப் பகுதிகள், குடிசை பகுதிகள், பணி நிமித்தமாக இடம் பெயா்ந்து மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 775 மையங்களில், 5 வயதுக்கு உள்பட்ட 40,355 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நடமாடும் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 3,203 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஏதேனும் காரணங்களால் போலியோ சொட்டு மருந்து போட இயலாத குழந்தைகளை கண்டறியும் வகையில் அடுத்து வரும் இரண்டு நாள்களில் பணியாளா்கள் வீடு, வீடாக சென்று பாா்வையிட்டு, போலியோ சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டு, ஆரோக்கியமாக குழந்தைகள் வளர உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா்கள் முருகேசன், ஸ்ரீதரன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com