கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சாலை பழுதடைந்து குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள்காப்பகம் வழியாக செல்லும் கூடலூா்-பெங்களூரூ சாலை காா்குடி வனச் சரகப் பகுதியில் அபயாரண்யம் உள்ளிட்ட இடங்களில் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது.
தற்போது பெய்துவரும் மழையால் குழிகளில் தண்ணீா் தேங்கி சாலை முழுவதும் குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலும், வன விலங்குகள் சாலையோரம் நிற்பதால் விரைவாக வாகனத்தை ஓட்டிச் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.