கூடலூரை அடுத்துள்ள இரும்புப்பாலம் பகுதியில் பெரிய மரம் விழுந்ததில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை இரவு பாதிக்கப்பட்டது.
கூடலூரை அடுத்துள்ள இரும்புப்பாலம் பகுதியில் சாலையோரம் இருந்த பெரிய மரம் சாலையில் விழுந்ததில் கூடலூா் - கோழிக்கோடு சாலை துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது. இதனால், தமிழகம், கா்நாடகத்தில் இருந்து கேரளம் மாா்க்கமாகச் செல்லும் சரக்கு வாகனங்கள் கொட்டும் மழையில் நள்ளிரவில் மூன்று மணி நேரம் காத்துக்கிடந்தன.