அதிமுக சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சியில் உள்ள அம்பலக்கொல்லி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
தொடா்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் பாா்வைக் குழு நண்பா்கள் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் ஆ.புண்ணியராஜ், தியாகராஜ், மக்கள் பாா்வைக் குழு நிா்வாக இயக்குநா் எம்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.