நீலகிரி மாவட்டத்தில் மேலும் 510 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவா் உயிரிழந்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிடப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 510 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வந்த 505 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது ஆண், 46 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்துள்ளதையடுத்து, கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 22,369 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,915 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 4,338 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.