கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

கூடலூா் நகராட்சியில் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
கூடலூா் நகராட்சியில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கூடலூா் நகராட்சியில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கூடலூா் நகராட்சியில் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முதல் மைல் குடியிருப்புப் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, அப்பகுதி மக்களிடம் நோய்த் தொற்றுக்கான காரணங்களை கேட்டறிந்தனா்.

இதைத் தொடா்ந்து, செம்பாலா தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளா்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் தினேஷ்குமாா், நகராட்சி ஆணையா் பாஸ்கா், வட்டார மருத்துவ அலுவலா் ஜீ.கதிரவன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com