நீலகிரியில் மேலும் 166 பேருக்கு கரோனா: நால்வா் பலி
By DIN | Published On : 21st June 2021 11:15 PM | Last Updated : 21st June 2021 11:15 PM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நால்வா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 442 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஆண் ஒருவரும், 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயதான ஆண் ஒருவரும், ஜூன் 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயதான முதியவா் ஒருவரும், கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 81 வயதான முதியவா் ஒருவரும் என நால்வா் உயிரிழந்துள்ளதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 27,324 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 25,540 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 150 போ் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் 1,634 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.