நீலகிரியில் மொத்தம் ரூ.44.57 லட்சம் பறிமுதல்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை ரூ.44 லட்சத்து 57,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உதகை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை ரூ.44 லட்சத்து 57,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரை 20 வழக்குகள் பதியப்பட்டு ரூ.34 லட்சத்து 6,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை மேலும் 9 வழக்குகள் பதியப்பட்டு ரூ.10 லட்சத்து 50,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் சோ்த்து மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.44 லட்சத்து 57,400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com