கூடலூா் அருகே ரூ. 3.99 லட்சம் பறிமுதல்

கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள, தமிழக - கா்நாடக எல்லைகளில் புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள, தமிழக - கா்நாடக எல்லைகளில் புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையான நாடுகாணி, தமிழக - கா்நாடக எல்லையான தொரப்பள்ளி ஆகிய பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரண்டு லாரிகளில் வந்த வியாபாரிகளிடம் சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் பணம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கூடலூா் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா். ஆய்வுக்குப் பின்னா் அந்தத் தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com