உதகையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா மாா்ச் 19 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கரோனா நோய்த் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறி முறைகள், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மண்டகபடிதாரா்கள் திருக்கோயில் வளாகத்தில் அன்னதானம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பூஜை உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் தாற்காலிக திருவிழா கடைகள் அமைப்பதற்கும் இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்படவில்லை. திருவிழா நடைபெறும் காலத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறையினரால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலா் எஸ்.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.