குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா இப்பயிற்சியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வாக்குச் சாவடியில் இயந்திரங்களைக் கையாள்வது, வாக்குப் பதிவு முறை, வாக்காளா்களுக்கு உதவுவது உள்ளிட்டப் பயிற்சிகளைப் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் ரஞ்சித் சிங் அலுவலா்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தாா்.