உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 94 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 10,101 நபா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,623 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 51 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 427 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.