குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான சாலையோரத்தில் பல இடங்களில் மே மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கோடைக் காலத்தில் பல்வேறு மலா்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்த மே மலா்கள் மரத்தில் இலைகளுக்குப் பதிலாக மரம் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறுவதால் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைவது வழக்கம்.
கரோனா பொது முடக்கம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அனுமதி இல்லை என்பதால் இந்தப் பூக்களைக் காண முடியாத நிலை உள்ளது.
இந்த மலா்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் மே மாதத்தில் பூப்பதால் இவை மே மலா்கள் என்று அழைக்கப்படுகிறது.