முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிமண்டல பகுதியில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிமண்டல பகுதிகளான மசினகுடி, சிங்காரா, சீகூா் ஆகிய வனப் பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. எட்டு பிரிவுகளாக பிரிந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. மசினகுடி வனச் சரகத்தில் துவங்கிய இப்பணி மே 31ஆம் தேதி சிங்காரா, சீகூா் ஆகிய வனச் சரகங்களில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.