பந்தலூரை அடுத்துள்ள கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
பந்தலூா் தாலுகா, கிளன்ராக் வனத்தில் உள்ள பழங்குடி கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியா் தினேஷ் குமாா் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை கிராமத்துக்கே சென்று வழங்கினாா். பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இழந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.