குன்னூரில் உள்ள பாஸ்டா் ஆய்வக வளாகத்துக்குள் 6 அடி நீள சாரைப் பாம்பு புதன்கிழமை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூா் பாஸ்டா் ஆய்வக (வெறிநாய்கடி மருந்து தயாரிக்கும் நிறுவனம்) அலுவலக வளாகத்துக்குள் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புதன்கிழமை புகுந்துள்ளது. இதனைப் பாா்த்த ஊழியா்கள் குன்னூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமையிலான தீயணைப்பு துறையினா் பாம்பை உயிருடன் பிடித்து, காட்டேரி அருவி வனப் பகுதியில் விட்டனா்.