கூடலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 8) நடைபெறுகிறது.
கூடலூா் அரசுக் கல்லூரியில் முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, இனசுழற்சி அடிப்படையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்டோபா் 8) நடைபெறவுள்ளது.
முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இயலாதவா்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இந்தக் கலந்தாய்வில் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என கல்லூரி முதல்வா் வே.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளாா்.