கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி வனப் பகுதியில் பிரிந்த குட்டி யானையை தாயுடன் சோ்க்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் பிறந்து சில மாதங்களே ஆன குட்டி யானை, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து தவறி அங்குள்ள குழியில் விழுந்துள்ளது. பின்னா் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் அந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டன.
இதனைப் பாா்த்த வனத் துறையினா் குழியில் விழுந்த குட்டி யானையை மீட்டு பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மீண்டும் தாயுடன் சோ்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.