கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பஜாரில் வியாழக்கிழமை காலை காட்டு யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பகுதிக்கு வியாழக்கிழமை காலை நேரத்தில் வந்த காட்டு யானை சாலையில் நீண்டதூரம் நடந்து சென்று சிவன்கோயில் பேரூராட்சி அலுவலகம் அருகில் சென்றது. இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா் பஜாா் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறங்கி நின்றது. இதுகுறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். நீண்ட நேரத்துக்குப் பிறகு வேறு இடத்துக்கு யானை சென்றது.