கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் வாகனம் மோதியதில் நீலகிரி காமன் லங்கூா் இன குரங்கு இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி - மாவநல்லா சாலையில் சுமாா் 5 வயதுடைய காமன் லங்கூா் இன குறங்கு இறந்துகிடந்தது தொடா்பாக வனத் துறையினா் ஆய்வு செய்தனா். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் குரங்கு இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மசினகுடி வனச் சரக அலுவலா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.